அருமலைக்கோட்டை
(அருள்மொழி வர்மன்-ராஜராஜ சோழன்)
அருள் மலைக் கொண்டு கட்டிய கோட்டை - காவிரி
ஆறு பாய்ந்து வளரும் செந்நெல் தட்டை
இசைவளம் நிறைந்த குழந்தை வளநாட்டை - வாழ்த்திடுவர்
ஈகைக் கரம் கொண்ட இவர்களது வீட்டை
உழவர் வணங்கிடுவர் உழைத்திடும் மாட்டை - ஓதிடுவர்
ஊக்கத்தை உரைக்கும் பெரியோரது பாட்டை
எதிர்ப்பவன் எவனாயுனும் இவர்களுக்கு வேட்டை - என்றும்
ஏற்றமுறக் கற்றிடுவர் கல்வி ஏட்டை
ஒவ்வொருவரும் போற்றிடுவர் ஒருமைபாட்டை-மத்தியில்
ஓம் காரமை விளங்கிடும் மாகாளியின் கோட்டை
ஐய்யனார் செல்கிறார் குதிரை மீது சாட்டை வீசி -இங்கு
ஔவையார் வந்தால் பாடிடுவார் அடர்ந்த காட்டை...
-அருமலை கவி சந்திர .சதிஸ் கொண்டையார் ...
No comments:
Post a Comment