Monday, November 29, 2010

சுந்தர வளநாடு

சுந்தர பாண்டியன்   வளநாடு -சுந்தர வளநாடு :


சுந்தர நாடு-சுந்தர நாட்டில் இடம்பெற்றுள்ள ஊர்கள்


  • வாளமர் கோட்டை.
  • வரவுக்கோட்டை
  • காட்டூர்
  • கரைமீன்டார் கோட்டை
  • வாண்டையார் தெரு - (வாளமர் கோட்டை)
  • வாண்டையார் இருப்பு
  • வாண்டையார் இருப்பு வடக்கு
  • வாண்டையார் இருப்பு தெற்கு
  • கொட்டைன்டார் இருப்பு
  • திருநாஇருப்பு
  • நாய்க்கான் கோட்டை
  • மடிகை
  • ஜென்பகபுரம்
  • தென்கொடார் இருப்பு
  • பெரன்டார் கோட்டை
  • துறையூர்

சுந்தரநாடு வாளமர் கோட்டை ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில் தல வரலாறு..

சுந்தரநாடு வாளமர் கோட்டை என்ற பெயருக்குமுன் வழங்கப்பட்ட பெயருக்கன காரணம் என்னவென்றால் முன்னொரு காலத்தில் ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமியை ஆலங்காட்டில் பிர்மவிஷ்ணுவாதி  தேவர்களால்  பூஜிக்கப்பட்ட காரணத்தால் வானவர் கோட்டை  என்றும் பெயர் வழங்கப்பட்டது. 

பின் ,

சுந்தரநாடு வாளமர் கோட்டை  என்று பெயர் வழங்கப்பட்டது ஏன்?.

 இந்த பெயர் எதோ ஊருக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டது இல்லை இது ஒரு சரித்திரம்.

ஒரு முறை மன்னன் வேட்டையாடுவாதற்காக வந்த போது தாகமாக இருக்காவே இங்குள்ள ஆல்ங்காட்டில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து பக்கத்திலுள்ள குளத்தில் தண்ணிர் குடித்து விட்டு கிளம்பும் போது மன்னன் அங்குள்ள சிவலிங்கத்தை காணுகிறார்.அம்மன்னன் உடனை தனது உடைவாளை கிழே வைத்து சிவலிங்கத்தை தரிசித்து மிண்டும் வாளை எடுக்க முயன்ற்போது வாள் வரவில்லை.
மன்னன் தன்னை மறந்து சிவலிங்கத்தை தரிசிக்கும் போது மன்னனுக்கு இடபரூடராய் ( இறைவன் சிவபெருமன்)காட்சியளித்த பின் இந்த வானவர் கோட்டை என்ற பெயர்
வாள்அமர்  கோட்டை என்றனது.

பிறகு அம்மன்னன் மகன் சுந்தர பாண்டியன்  இந்த இடத்தில் திருக்கோயிலை எழுப்பி இத்தலத்தில் எழுந்தாருள்யுள்ள மூர்த்திக்கு சுந்தரேஸ்வரர் என்றும் இந்நாட்டிற்கு சுந்தரநாடு என்றும் பெயர் வைத்து அம்மன்னன் இத்தலத்திலே இருந்து சமாதி அடைந்தார். அவர் திரு உருவத்தை இந்த ஆல்யத்திற்கு மேற்க்கே காணலாம்.

                                 








தவத்திரு காத்தையா சுவாமிகள்-சுந்தர வளநாடு:-

தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா

14-ம் ஆண்டு வாளமர்கோட்டை 
தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா:-தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா (25-10-2010) அன்று பூஜைகள் மற்றும் அண்ணதனம் சுவாமிகளுக்கு மிகவும் சிறப்பாக பூஜை நடைப்பெற்றது இதில் சுந்தர நாட்டு மக்கள் கலந்துகொண்டு தவத்திரு காத்தையா சுவாமிகளின் அருள் பெற்று சென்றனார்.

Saturday, November 20, 2010

சௌந்தரநாயகி உடனுறை வேணிநாதசுவாமி திருக்கோவில்

                                                           உ
                                                   சிவ மயம்
 சௌந்தரநாயகி உடனுறை வேணிநாதசுவாமி திருக்கோவில்

                            


மூலவர்              :   வேணிநாதர்
  உற்சவர்:  -
  அம்மன்/தாயார்:  சௌந்தரநாயகி 
  தல விருட்சம்:   வில்வம் 
  தீர்த்தம்:   சூரிய புஷ்கரிணி, சந்திர புஷ்கரணி, 
  ஆகமம்/பூஜை :   -
  பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  பிறைமதி சூடிய சடையார் கோவில் 
  ஊர் :  சடையார் கோவில் 
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு
 பதிகம்                       :   -

 நாடு                          : குழந்தை வளநாடு -குந்தவை வளநாடு  

                     தெய்வ மனம் கமழ சிந்தையை சிவமயமக்கி சித்தத்தில் உள்நின்று உணர்த்தவல்ல பன்னிரு திருமுறைகளிலே வழிபாட்டிற்குரிய தேவாரம் ,திருவாசகம் போன்ற தெய்வீக பாக்களை அருளிய சமய குரவர்கள் தோன்றி அவர்தம் பாடல்பெற்ற அனேக திவ்ய தலங்களை தன்னகத்தே கொண்டு தெய்வ தன்மையால் விளங்குவதும் காவிரியின் கருணை பெருக்கால் வளமிகு செழும் நிலங்களால் சூழபெற்றதுமான சோழவள நாட்டின் தலைநகரமாம் நஞ்சை கொஞ்சும் தஞ்சயம்பதியின் கீழ்பால் குழந்தைவள நாடு எனும் குந்தவை வளநாட்டை சார்ந்த இத்திருக்கோவில் கடந்த 1913 ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

        இத்தலம் சடையார்கோவில், சௌந்தரநாயகி உடனுறை வேணிநாதசுவாமி மற்றும் விநாயகர், முருகன், அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், நூதன பிரதிஷ்டையாக துர்க்கை அம்மன் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களும் அமையப்பெற்று பக்க்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.


               இத்தகு ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் அரசின் நிதி உதவியோடும் வெளியூர், உள்ளூர் கிராமவாசிகளாலும் 
                                    "திருப்பணி அருளாளர்" கோவை. முனைவர். இராச. வசந்தகுமார் அவர்கள் பங்கேற்ப்புடனும் புதிப்பிக்கபெற்று புதிதாக மண்டபங்கள் அமைக்கப்பெற்று வர்ண கலாபங்கள் செய்து புனர் வந்தனம் செயவிக்கபெற்று நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2041 ஐப்பசி மாதம் 4 ம் தேதி (21 .10 .2010 ) வியாழக்கிழமை நடைபெற்றது.



விநாயகர் துதி :
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே


சிவன் துதி :
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே...


அம்மன் துதி :
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் சௌந்தரநாயகி  கடைக்கண்களே.